Tuesday 25 October, 2011

பருப்பு சாதம்


தேவையான பொருள்கள்

    துவரம் பருப்பு - 1/2 கப்
    தக்காளி - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்க
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
  செய்முறை




வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும்.
உருளியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.






 






வேகவைத்த வெங்காயம், தக்காளி, உப்பு, பெருங்காயத்தூள், சேர்த்து நன்றாக வதக்கவும்.











அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.





 






பின் வேக வைத்து வைத்துள்ள பருப்பை குழைத்து இக்கலவையுடன் சேர்க்கவும்.









பருப்பு கலவையை நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதிவந்தால் போதும்.











 கொத்தமல்லி தழை தூவி, சாதம், அப்பளத்துடன் சாப்பிட கூடிய பருப்பு ரெடி.
       

4 comments:

ஆமினா said...

ஹாய் நாகா.... ஆச்சர்யமா இருக்கு....

நேத்தே உங்க ப்ளாக் தேடி பார்த்தேன்.... கெடைக்கவே இல்ல. கமெண்ட்க்காக வெயிட் பண்ணேன். அதன் மூலமா உங்க ப்ளாக் கண்டுபிடிக்க!!

வாழ்த்துக்கள் நாகா
தொடர்ந்து கலக்குங்க

திரட்டில இணைச்சா நெறைய பேர் பார்ப்பாங்க :-)

ஆமினா said...

please remove word verification

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

நாகா ராம் said...

வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி <<(())>>

நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லை. மிக ஆச்சர்யமாக இருக்கிறது. மெம்பராக இணைந்ததற்கு நன்றி. நல்ல குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...