Friday 23 December, 2011

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்

தக்காளி - 2
வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 6
புளி - ஒரு கோது
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு

செய்முறை




தக்காளி வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.








வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.




சூடுபோக ஆற விட்டு, உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

Tuesday 20 December, 2011

க்ரிஸ்பி கோகனட் கோபி





காலிஃப்ளவர் - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு


  காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி கொதிநீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேங்காய் பால் பவுடர், உப்பை ஒன்றாக  கலந்துவைக்கவும்.
    
 காலிஃப்ளவரை தண்ணீர் இல்லாமல் வடித்து பொடிகலவையை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
 





கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து காளிஃப்ளவரை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்





எண்ணெயில் பொரித்தெடுத்தது போன்ற க்ரிஸ்பி கோகனட் கோபி ரெடி.

Friday 16 December, 2011

பட்டாணி பனீர் குழம்பு



பனீர் - 100கிராம்
வேக வைத்த பட்டாணி - 1 கப்
தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன்
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு





 
 
பனீரை துண்டுகளாக்கி தோசைகல்லில் சிறிது எண்ணெய் தெளித்து வறுக்கவும்.







தக்காளி, வெங்காயம், பூண்டு, சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.





பட்டை, கிராம்பு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.


 


தேங்காய் பால் பவுடரில் 1/2 கப் வெந்நீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.


 







மசாலா வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்க்கவும்



 








1 நிமிடம் கழித்து தேங்காய் பால் பவுடர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 


 


நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுதே வறுத்த பனீர் சேர்த்து 1 நிமிடம் சிம்மில் வைக்கவும்.







சப்பாத்தி, நாண், மசாலா இட்லி, சாதத்திற்கு ஏற்ற சுவையான பட்டாணி பனீர் குழம்பு சுவைக்க தயார்  



Monday 28 November, 2011

திரட்டுப்பால்

பால் - 1 லிட்டர்
ஜீனி - 1 கப்
தயிர் - 1 ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்



 
 முதலில் பாலைக்காய்ச்சி பொங்கியதும் சிம்மில் வைத்து 1 ஸ்பூன் தயிர்சேர்க்கவும். பால் பிரிந்ததும் அதில் ஜீனி, 2 ஸ்பூன் நெய் சேர்த்து விடாமல் கிளறவும்.







 

ஜீனி கரைந்து, ஓரங்களில் குமிழ்கள்வந்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்




சுவையான திரட்டுப்பால் ரெடி







Friday 18 November, 2011

ரோஸ்டட் பாகற்காய்



பாகற்காய் - 1 கப்
வெங்காயம்  - 10
தக்காளி - 2

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்பொடி, உப்பு - 1ஸ்பூன்


 

 பாகற்காயை இரண்டாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து ஊறவிடவும். 

10, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அதிலிருக்கும் தண்ணீரை வடித்தால் கசப்புத்தன்மை போய்விடும்.




 
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை நீளமாகவும் நறுக்கவும்.

பாகற்காயில் மஞ்சள் தூள், மிளகாய்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,






கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை நன்கு வதக்கவும்





     



வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.





 

  

ஊறவைத்த பாகற்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.



 
ரோஸ்டட் பாகற்காய் ரெடி

Friday 11 November, 2011

ரவா கிச்சடி


வறுத்த ரவை - 2 கப்
பட்டாணி - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு, கடலைபருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை - ‌சி‌றிதளவு
எண்ணெய்
உப்பு
 




தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி வேகவை‌த்து‌க் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.










வாண‌லி‌யி‌‌ல் 1ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.











வெங்காயம், ‌தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.











எண்ணெய் பிரியும்போது பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவு‌ம்.










எ‌ல்லா‌ காய்களும் ந‌ன்கு வத‌ங்‌கிய ‌பி‌ன்பு தேவையான அளவு தண்‌ணீ‌ர், உ‌ப்பு சேர்த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.





 



த‌ண்‌ணீ‌ர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியாகாமல் ‌கிளறவு‌ம்.










அதில் 3, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கவும்.











அடுப்பை சிம்மில் வைத்து சிறிது இடைவெளி இருக்கும்படி மூடிவைக்கவும்












5 நிமிடம் கழித்து நன்கு கிளறி பரிமாறவும்






Saturday 5 November, 2011

புட்டு


 அரிசி மாவு - 1 1/2 கப்
 துருவிய தேங்காய் - 1 கப்
 சீனி - 1/2 கப்
 ஏலக்காய் - 2

 


முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து  உதிர்த்து வைக்கவும்.



    
ஸ்டீமரில் அரிசி மாவு கலவையை  10 நிமிடங்கள் வேகவிடவும்.








வெந்ததும் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய், சீனி, சேர்த்து கிளறவும்.













 சுவையான புட்டு தயார்.








Related Posts Plugin for WordPress, Blogger...